நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 62வது தேசிய விருதுப்பட்டியலில் சிறந்த படமாக விருதுபெற்ற மராத்திய படம் 'கோர்ட்'.. மராத்தியில் மட்டுமல்லாது குஜராத்தி, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலும் இந்தப்படம் தயாராகியுள்ளது. இந்தப்படம் வெளியாவதற்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு கிட்டத்தட்ட இருபது விருதுகள் வரை வாங்கியிருக்கிறது.. சமூக பிரச்சனை ஒன்றை மையமாக வைத்து சைதன்யா தம்ஹான் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப்படத்தை தான் பெங்களூரில் ரிலீஸ் செய்ய விநியோகஸ்தர்கள் மறுத்துவிட்டார்கள்.. கர்நாடகாவுக்கும் மகாராஷ்டிராவுக்கும் பல காலமாக இருந்துவரும் வடக்கு எல்லை பிரச்சனை தான் இதற்கு காரணம். கர்நாடகாவின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள பல பகுதிகள் தங்களுக்கு சொந்தமானவை என்று மகாராஷ்டிரா பல வருடங்களாக சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் இந்த பகுதிகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் மராத்தி தான் பேசுகிறார்கள்.. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தப்படத்தை பெங்களூரில் ரிலீஸ் செய்தால் அரசியல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படலாம் என கருதி இந்தப்படத்தை வெளியிடுவதை நிறுத்தி வைத்துவிட்டார்கள்.