விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
ஜெய் நடித்த அவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கியவர் மீரா கதிரவன். அவர் தற்போது விழித்திரு என்ற படத்தை இயக்கி வருகிறார். கிருஷ்ணா, விதார்த், தன்சிகா நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இந்த படத்துக்கு சத்யன் என்பவர் இசையமைத்தாலும், டி.ராஜேந்தரும் ஒரு பாடலை எழுதி இசையமைத்து, பின்னணி பாடியிருக்கிறார். அதோடு அந்த பாடலில் அவரே நடனமாடப்போகிறாராம். வல்லவன் படத்தில் நயன்தாரா-ரீமாசென்னுடன் இணைந்து சிம்பு ஆடிய, அம்மாடி ஆத்தாடி உன்னை எனக்கு தறியாடி -என்ற பாடல் போன்று இந்த பாடலில் டி.ராஜேந்தர் நடனமாடுகிறாராம்.
அவருடன், பிரபல மும்பை கவர்ச்சி நடிகை சனாசூரி மற்றும் சலீம் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்த அஸ்மிதா ஆகிய இருவரும் இணைத்து கவர்ச்சி குத்தாட்டம் போடுகிறார்களாம். வல்லவன் படத்தில் சிம்பு ஆடிய ஆட்டத்துக்கு துளியும் குறைவில்லாத எனர்ஜியுடன் அந்த பாடலில் நடனமாட தயாராகிக் கொண்டிருக்கிறாராம் டி.ஆர்.,