விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
அட்டகத்தி படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதையடுத்து, ரம்மி படத்தில் விஜயசேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். அப்படத்தில் இடம்பெற்ற கூடமேல கூட வச்சி என்ற பாடல் ஐஸ்வர்யா ராஜேஷை பிரபலப்படுத்தியது. அதையடுத்து, அதே விஜயசேதுபதிக்கு ஜோடியாக பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், அந்த சமயத்தில் தனுஷ், வெற்றி மாறன் இருவரும் இணைந்து தயாரித்த காக்கா முட்டை என்ற படத்திலும் நடித்தார்.
அப்படத்தில் 35 வயது சேரிப்பெண்ணாக தனது உடல்எடையை அதிகப்படுத்தி நடித்தார் அவர். அதனால் நடித்து முடித்த பிறகு இந்த படத்தினால் தனது ஹீரோயினி இமேஜ் பாதிக்கப்படுமோ என்றும் பயந்தார். ஆனால், அந்த படம் உடனடியாக வெளியே வரவில்லை. அதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், அதையடுத்து திருடன் போலீஸ் உள்பட சில படங்களில் கமிட்டாகி நடித்தார்.
இந்தநிலையில், கிட்டத்தட்ட படமாக்கப்பட்டு ஒன்றரை வருடத்துக்கு பிறகு தேசிய விருது கமிட்டிக்கு அனுப்பப்பட்ட காக்கா முட்டை இப்போது தேசிய விருது பெற்றிருக்கிறது. இதையடுத்து, ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். முக்கியமாக பாரதிராஜா, பாலா உள்ளிட்ட இயக்குனர்களே பாராட்டியிருப்பதால் சந்தோசத்தின் உச்சாணியில் இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.