மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! |
மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு உயரிய விருது ஒன்று வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. செவாலியர் சிவாஜி கணேசன் விருதை மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு வழங்க திரை உலகம் முடிவு செய்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டில் இருந்து செவாலியர் சிவாஜி கணேசன் விருதை ஸ்டார் விஜய் டி வி நிறுவனம் வழங்கி வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் இந்திய சினிமாவில் சாதனை புரிந்தவர்களுக்காக இந்த உயரிய விருது வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த 2006ம் ஆண்டில் உலக நாயகன் கமல் ஹாசனுக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2007, ஆண்டில் பிரபல இயக்குனர் மணி ரத்னத்திற்கும், 2008யில் இசை புயல் ஏ ஆர் ரஹ்மானுக்கு, 2009யில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்திற்கும், 2010யில் மறைந்த சிறந்த இயக்குனர் கே பாலச்சந்தருக்கும், 2011யில் பிரபல பின்னணி பாடகரான எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கும், 2012யில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கும், 2013யில் சிறந்த இயக்குனர் ஷங்கருக்கும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த உயரிய விருதை இம்முறை மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சினிமா கலைஞருக்கும் இந்த விருது மிக முக்கியமான உயரிய விருது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.