'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
சூது கவ்வும்' படம் மூலம் பரவலாக அறியப்பட்ட அறிமுக நடிகர் அஷோக் செல்வன். அடுத்து பீட்சா படத்தின் இரண்டாம் பாகமான 'தி வில்லா' படத்தில் தனி ஹீரோவாக உயர்ந்தார். அதனைத் தொடர்ந்து ரமேஷ் இயக்கத்தில் 'தெகிடி' என்ற படத்திலும் ஹீரோவாக நடித்தார். விமர்சனரீதியாக மட்டுமல்ல, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது தெகிடி. தெகிடி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஷோக் செல்வனைத் தேடி இப்போது வாய்ப்புகள் வரத்தொடங்கி இருக்கின்றன. அருண்பாண்டியன் தயாரிக்கும் சவாலே சமாளி, 144, வரைபடம் ஆகிய படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் அஷோக் செல்வன். தவிர 'கூட்டத்தில் ஒருவன்' என்ற படத்திலும் நடிக்க தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். முழுக்க முழுக்க ரொமான்டிக் கதையான இப்படத்தை ஞானவேல் எனும் அறிமுக இயக்குனர் இயக்குகிறார்.
இவர் பிரகாஷ் ராஜின் 'தோனி' படத்திற்கு வசனம் எழுதியவர். 'கூட்டத்தில் ஒருவன்' அஷோக் செல்வனுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார்.