மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் போலீஸ் அதிகாரியாக தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தார் மம்முட்டி. ஆனால் 20௦12ல் வெளியான 'பேஸ் 2 பேஸ்' படத்தில் போலீசாக நடித்தவர், காக்கி யூனிபார்முக்கு கடந்த மூன்று வருடமாக ஓய்வு கொடுத்துவிட்டார். இப்போது மீண்டும் யூனிபார்ம் மாட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆம்.. புதிய படம் ஒன்றில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் மம்முட்டி. சரி.. இந்தப்படத்தை இயக்கப்போவது 25 வயதுகூட நிரம்பாத நிதின் பணிக்கர் என்கிற இளைஞன் தான் என்றால் நம்ப முடிகிறதா..? தாராளமாக நம்புங்கள்.. ஏனென்றால். போலீஸ் கதைகளை உருவாக்குவதற்கென்றே அவதாரம் எடுத்தவர் போல, தனது கதைகளால் மலையாள திரையுலகில் சூப்பர்ஹிட் வெற்றிகளை அள்ளிய பிரபல கதாசிரியரும், இயக்குனரும், தற்போது முழுநேர நடிகராக மாறிவிட்டவருமான ரெஞ்சி பணிக்கரின் மகன் தான் இந்த நிதின். ஷாஜி கைலாஷ், ஜோஷி ஆகியோரின் ஆஸ்தான கதாசிரியராக இருந்த ரெஞ்சி பணிக்கர், சுரேஷ்கோபி, மம்முட்டி, மோகன்லால் ஆகியோரின் சூப்பர் ஹிட் படங்களுக்கு கதை எழுதியவரும் கூட. தவிர மம்முட்டியை போலீஸ் அதிகாரியாக்கி ரெஞ்சி பணிக்கர் இயக்கிய 'ரௌத்திரம்' படம் மெகா ஹிட். இவ்வளவு அனுபவம் கொண்ட தந்தை இருக்கும்போது மகனுக்கு என்ன கவலை..? தவிர படத்தையும் தந்தையே இணைத்தயாரிப்பாளராக இருந்து தயாரிக்க உள்ளார். ஆக மம்முட்டியிடம் இருந்து இன்னொரு அதிரடி போலீஸ் படத்தை இந்த வருடமே எதிர்பார்க்கலாம்.