மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாரதிராஜாவால் கண்களால் கைது செய் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர் ப்ரியாமணி. அதன் பிறகு அது ஒரு கனா காலம், மது படங்களில் நடித்தார். பருத்தி வீரன் படம் அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. தேசிய விருதின் மூலம் புகழ்பெற்றார். ஆனால் அதற்கு பிறகுதான் அவருக்கு சறுக்கல் தொடங்கியது. காரணம் அவர் கிளாமர் பாதையை தேர்ந்தெடுத்ததுதான். பருத்தி வீரனுக்கு பிறகு வெளிவந்த மலைக்கோட்டை, ஆறுமுகம், படங்களில் கிளாமராக நடித்தார். அது அவருக்கு உதவில்லை. அதன் பிறகு தெலுங்கு பக்கம் போய்விட்டார். 2010ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ராவணன் படம்தான் அவர் கடைசியாக நடித்த தமிழ் படம். அதன் பிறகு சாருலதா என்ற கன்னட படம் தமிழில் டப்பாகி வெளிவந்தது. தற்போது மீண்டும் அவர் 6 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கிறார்.
மிஷ்கின் உதவியாளர் ஜி.ஆர்.ஆதித்யா என்பவர் காமெடி படம் ஒன்றை இயக்க இருக்கிறார். அதற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. கதை, திரைக்கதையை எழுதியிருக்கும் மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார். இதில் கற்றது தமிழ் ராம் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ப்ரியாமணி ஹீரோயினாக நடிக்கிறார். இன்னுமொரு இளம் ஹீரோ நடிக்கிறார். அவர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. ஜுன் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.