விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய ஜாலிப் படமான 'சென்னை 28' படம் மூலம் விளையாட்டாக படம் இயக்க வந்தவர் வெங்கட் பிரபு. அதன் பின் “சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி” ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா, நயன்தாரா நடிக்கும் 'மாஸ்' படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில்தான் முதன் முறையாக கதை சொல்லியிருக்கிறேன் என வெங்கட் பிரபுவே ஒத்துக் கொண்டுள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். “இதுவரை நான் இயக்கிய படங்கள் காட்சிகளின் தொகுப்பாகத்தான் இருந்தது. ஆனால், இப்போது 'மாஸ்' படத்தில் முதன் முறையாக கதை சொல்ல முயற்சித்திருக்கிறேன்,” என வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.
இதற்கு முன் அவர் கொடுத்த பல பேட்டிகளில் கூட எனது படங்களில் கதை எங்க இருக்கு 'சென்னை 28' படத்திலேயே ஆரம்பித்து விட்டார். மற்றவர்கள் எங்கே கதை என்று கேட்பதற்கு முன்னாலே தாங்களாகவே படத்தில் கதை இல்லை என்று சொல்லிவிட்டால் நல்லது என அவர்கள் நினைத்ததே அதற்குக் காரணம். இப்போதுதான் முதல் முறையாக கதை சொல்ல வருகிறார் என்றால் கண்டிப்பாக 'மாஸ்' படம் வெளிவரும் போது படத்தில் கதை இருக்கிறது, என விமர்சிப்பவர்கள் அனைவருமே கண்டிப்பாக அந்தக் கதையைச் சொல்வார்கள்.
படம் வெளிவரும் முதல் காட்சி வரையிலாவது அந்தக் கதை என்ன என்பதை கொஞ்சம் சொல்லாமல் காப்பாற்றிக் கொள்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறார். அதன் பிறகுதான் 'அஞ்சாமல்' அனைவரும் சொல்ல ஆரம்பித்து விடுவார்களே...