‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புலி படப்பிடிப்பு ஆரம்பத்தில் சென்னையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட அரண்மனை செட்டில் நடைபெற்றது. விஜய், ஸ்ரீதேவி, சுதீப், ஹன்சிகா சம்பந்தப்பட்ட சரித்திர கெட்டப் காட்சிகள் அப்போது படமாக்கப்பட்டு வந்தது. அதோடு காமெடி காட்சிகளும் அங்குதான் படமானது. பின்னர் 2 மாதங்களுக்குப்பிறகு அங்கிருந்து கேரளா சென்றது புலி யூனிட். அங்குள்ள அடர்ந்த காடு மற்றும் மலைப்பிரதேசங்களில் படப்பிடிப்பு நடந்து வந்தது. அப்போதுதான் விஜய், ஸ்ருதிஹாசன் நடிக்கும் காட்சிகள் மட்டுமின்றி, பாடல்களும் படமானது. தற்போது கேரளாவிலும் படப்பிடிப்பு நடத்தி விட்டு சென்னை திரும்பி விட்டனர்.