மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஒருவழியாக ஜூனியர் என்.டி.ஆரை வைத்து இயக்கிய 'டெம்பர்' படத்தை ரிலீஸ் செய்துவிட்டு டென்சனில் இருந்து விடுபட்டிருக்கிறார் பூரி.. படம் ஹிட்டா, ஓப்பனிங்கில் எவ்வளவு கல்லா கட்டியது என்பதையெல்லாம் தயாரிப்பாளரும் ஜுனியர் என்.டி.ஆரும் பார்த்துக்கொள்வார்கள். அடுத்து தெலுங்கில் அவர் யாரை வைத்து இயக்கப்போகிறார் என ரசிகர்கள் பார்த்துக்கொண்டிருக்க, கன்னட சினிமா பக்கம் அவரது கவனம் திரும்பியிருக்கிறது.
கன்னட சினிமா அவருக்கு ஒன்றும் புதிது இல்லை. மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார், தனது மகன் புனீத் ராஜ்குமாரை கதாநாயகனாக அறிமுகப்படுத்த நினைத்தபோது, கன்னட திரையுலகில் இயக்குனர்களை தேடவில்லை. தெலுங்கில் பிரகாசித்துக்கொண்டிருந்த பூரி ஜெகநாத்தை அழைத்து தனது மகனை ஒப்படைத்தார். அப்படி உருவான படம் தான் மாஸ் ஹிட்டான 'அப்பு'.
இந்தப்படம் பின்னாளில் தமிழில் சிம்பு நடிக்க 'தம்' ஆக ரீமேக்கானது எல்லாம் பழைய கதை. இப்போது கன்னடத்தில் மீண்டும் பூரிக்கு அழைப்பு வந்திருப்பது முன்னாள் பிரதமரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான தேவகௌடாவின் பேரனான நிகில் கௌடா நடிக்கும் படத்தை இயக்கத்தான். நிகில் ஏற்கனவே 'விதான ஸௌதா' படத்தில் அறிமுகமாயிருந்தாலும் பூரி ஜெகனாத்தின் மோதிரக்கையால் குட்டுப்பட்டால், புனீத் ராஜ்குமார் போல சிகரம் தொடுவார் என நினைக்கிறது நிகிலின் குடும்பம். பூரியை இம்ப்ரெஸ் செய்வதற்காக தனது உடம்பை பிட்னெஸ்ஸாக மாற்றி வருகிறாராம் நிகில்.