‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழில் ஏழாம் அறிவு, 3, பூஜை படங்களில் நடித்த ஸ்ருதிஹாசன், இப்போது விஜய்யுடன் புலியில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு, தெலுங்கு,. இந்தியிலும் சில படங்களில் நடித்து வருகிறார். ஆக அவரது கால்சீட் டைரி எப்போதும் புல்லாகவே உள்ளது.
மேலும், இந்த படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அடுத்து நடிக்கும் படங்களுக்கான கதைகளையும் அவ்வப்போது டைரக்டர்களை ஸ்பாட்டுக்கு வரவைத்து கேட்கிறார் ஸ்ருதிஹாசன். அப்படி கேட்கும் கதைகளை அவர் உடனே ஓகே செய்வதில்லை. என்னோட முடிவை அப்புறமா சொல்றேன் என்று அவர்களை அனுப்பி விடுகிறார்.
அதையடுத்து, தனது தந்தையான கமலிடம் தான் கேட்ட கதைகளை சொல்லி அவரிடம் கருத்து கேட்கிறாராம். அப்போது அவர் சொல்லும் கருத்தைப் பொறுத்தே எந்தெந்த கதைகளில் நடிப்பது என்று முடிவு செய்கிறாராம் ஸ்ருதி. மேலும், தெலுங்கு, இந்தி படங்களுக்கே கூடுதல் முன்னுரிமை கொடுத்து வந்த ஸ்ருதியை, தமிழில் அதிக படங்களில் நடிக்குமாறு கமல் சொன்ன பிறகுதான் தன்னைத்தேடி வந்த படங்களை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினாராம்.