விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
தனது பாடல்களை தனியார் ஆடியோ நிறுவனங்கள் சட்டவிரோமாக ஒலிபரப்புவதாகவும், விற்பனை செய்வதாகவும் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 6 ஆடியோ நிறுவனங்களுக்கு கோர்ட் நிரந்தர தடை விதித்தது. உடனடியாக இளையராஜா தன் பாடல்களின் உரிமங்களை தயாரிப்பாளர் சங்கத்திற்கு கொடுத்தார்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, துணை தலைவர் கதிரேன், செயலாளர் டி.சிவா, ராதாகிருஷ்ணன், பொருளாளர் டி.ஜி.தியாகராஜன் ஆகியோர் திருட்டு விசிடி தடுப்பு பிரிவு எஸ்.பி.ஜெயலட்சுமியை சந்தித்து தயாரிப்பாளர் சங்கம் சார்பிலும், இளையராஜா சார்பிலும் புகார் மனு ஒன்றை அளித்தனர். இளையராஜா சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
நான் தமிழ் திரைப்பட இசை அமைப்பாளராக இருக்கிறேன். என்னுடைய பாடல்களை முறையான அனுமதி இன்றி விற்பனை செய்பவர்கள், எனது அனுமதி பெற்றிருந்தாலும் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் விற்பனை செய்பவர்கள், எனது அனுமதி பெற்றிருப்பதாக பொய் சொல்லி விற்பனை செய்கிறார்கள். சென்னை கடைகளில் வீடியோ மற்றும் ஆடியோவாக எனது பாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் எனக்கு பல்வேறு வகையில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க மனுவில் "இளையராஜவின் பாடல்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதால் அவர் இசை அமைத்த படங்களை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.