மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தொழிலதிபர் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த், சென்னை 28 படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். தம்பி வினோத்குமார் தயாரிப்பில், ராஜபாண்டி இயக்கத்தில் நடித்த ''என்னமோ நடக்குது'' படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றதால். தற்போது மீண்டும் அதே டீம் அடுத்த படத்தை தொடங்கி இருக்கிறது.
இதற்கு ''சிகண்டி'' என்று முதலில் பெயர் வைத்தார்கள். தற்போது ''அச்சமின்றி'' என்று பெயர் மாற்றி இருக்கிறார்கள். மேகா, எனக்குள் ஒருவன், டார்லிங் படத்தில் நடித்த சிருஷ்டி டாங்கே ஹீரோயின். பிரேம்ஜி இசை அமைக்கிறார். கல்வி தொடர்பான படம். உயர்கல்வியில் நடக்கும் கொள்ளைகள், முறைகேடுகள், கல்வி தந்தைகள் உருவாகும் விதம் பற்றி படம் பேசப்போகிறது.
சென்னையில் நேற்று (மார்ச் 9) பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் வசந்த் அண்ட் கோ வசந்தகுமார் கலந்து கொண்டு படத்தை துவக்கி வைத்தார். முதல் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் 20 நாட்கள் நடக்கிறது. பாடல் காட்சிகளை வெளிநாடுகளில் எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.