ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ |
சமுத்திரக்கனி இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில், ஜெயம் ரவி, அமலா பால் மற்றும் பலர் நடிக்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த திரைப்படம் 'நிமிர்ந்து நில்'. சில பல தடைகளைக் கடந்துதான் இந்தப் படம் தமிழில் வெளியானது. மார்ச் 7ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு ஒரு நாள் தாமதமாக 8ம் தேதிதான் வெளியானது. எந்த ஒரு படமாக இருந்தாலும் அது குறிப்பிட்ட தேதியில் வெளியாகாமல் ஒரு நாள் தாமதமாக வெளியானால் கூட, அது ரசிகர்களின் வரவேற்பை அதிகம் பெறாது என்ற சென்டிமென்ட் தமிழ் சினிமாவில் உண்டு. அது இந்தப் படத்திற்கும் நடந்தது.
தமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பு அப்போதே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி அந்தப் படம் அப்போது வெளியாகவில்லை. தொடர்ந்து சில தேதிகள் அறிவிக்கப்பட்டு அதன் பின்னரும் அந்தப் படம் வெளியாகாமலே போனது. தற்போது மார்ச் மாதம் 27ம் தேதியன்று யுகாதி தினத்தன்று இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். நானி, அமலா பால் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். நானி நடித்து இதற்கு முன் வெளிவந்த சில தெலுங்குப் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்தப் படம் வெளியாகும் போதும் நானியின் மற்றொரு தெலுங்குப் படமான 'எவனே சுப்பிரமணியம்' படமும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.