ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
தினேஷ்-நந்திதா நடித்த அட்டகத்தி படத்தை இயக்கியவர் ரஞ்சித். அந்த படத்தின் மெகா ஹிட் அவரை கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை இயக்க வைத்தது. முதல் படத்தைப்போலவே இரண்டாவது படமும சூப்பர் ஹிட்டானதால் இப்போது ரஞ்சித்தும் கோலிவுட் ஹீரோக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார். இந்த நிலையில், சமீபகாலமாக சினிமா விழாக்களுக்கும் விசிட் அடிக்கும் ரஞ்சித், அப்போது அப்படங்களின் இயக்குனர்களை வாழ்த்தி பேசும்போது, சினிமாவைப்பற்றியும், சினிமா ரசிகர்களைப்பற்றியும் தனது கருத்தினை எடுத்து வைக்கிறார்.
அப்படி அவர் கூறுகையில், முதலில் டைரக்டர்கள் படமாக்கும்போகும் கதையில் தெளிவாக இருக்க வேண்டும். அவர்கள் எடுத்துக்கொள்ளும் கன்டெண்ட் ரொம்ப ஸ்ட்ராங்கானதாக இருக்க வேண்டும். கதைக்களம் அழுத்தமாக இருக்கும்போதுதான் படங்கள் வெற்றி பெறுகின்றன. தரமான படங்களை ரசிகர்கள் ஒருபோதும் கைவிட்டதில்லை என்பதுதான் தமிழ் சினிமாவின் வரலாறு. அந்த வகையில், டைரக்டர்கள் தங்களுடைய வேலையை ஒழுங்காக செய்தாலே அது அவர்களை அடுத்த லெவலுக்கு கொண்டு போய் விடும் என்கிறார் ரஞ்சித்.