விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
சென்னை: கணவர் நேரில் வந்து வருத்தம் தெரிவித்ததால், பெண் பாடல் ஆசிரியர் தாமரை போராட்டதை கைவிட்டார்.
சினிமா பாடலாசிரியர் தாமரைக்கும், கணவர் தியாகுவுக்கும் ஏற்பட்ட பிரச்னையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு, தியாகு வீட்டிலிருந்து தலைமறைவானார்.'தியாகு மீண்டும் வீட்டிற்கு வரவேண்டும், இருபது ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு என்ன சேவை செய்தார் என, தமிழ் சேவையாளர்கள் மூலம் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்' என, வலியுறுத்தி, சென்னை, சூளைமேட்டில் உள்ள, தியாகுவின் அலுவலகம் முன், தாமரையும் மகன் சமரனும் கடந்த, 27ம் தேதி போராட்டத்தை தொடங்கினர்.வேளச்சேரியில் உள்ள முதல் மனைவியின் மகள் வீட்டில், தியாகு இருப்பதாக கேள்விப்பட்டு, அங்கும், பிறகு, வள்ளுவர் கோட்டத்திற்கும் தாமரை போராட்டத்தை மாற்றினார். 3 நாட்களாக வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தி வந்தார்.இவரது போராட்டத்திற்கு, தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பும், நேற்று முன்தினம் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்தன. திரைப்பட இயக்குனர் கவுதமன், புகழேந்திதங்கராஜ், பாடலாசிரியர்கள் சிநேகன், கிருதியா என, பத்துக்கும் மேற்பட்ட, சினிமா பாடலாசிரியர்கள், நேற்று வள்ளுவர் கோட்டத்திற்கு நேரில் வந்து, தாமரைக்கு ஆதரவு தெரிவித்தனர்.
'கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும், தங்களுக்கு என்றைக்கும் சங்கத்தின் ஒத்துழைப்பு உண்டு' என, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மூலம் வலியுறுத்தப்பட்டது. இத்துடன், சங்க நிர்வாகிகளின் சார்பில், தியாகுவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையொட்டி, வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தும் தாமரையை, அவரது கணவர் தியாகு, இரவு 9:20 மணிக்கு நேரில் வந்து வருத்தம் தெரிவித்தார். தாமரையின் விருப்பப்படி, நடுநிலை விசாரணைக்குழு அமைத்து விசாரிக்க சம்மதம் தெரிவித்தார். ''கடந்த எட்டு நாட்களாக, போராட்டத்தால், உங்களுக்கும், மகன் சமரனுக்கும் ஏற்பட்டுள்ள உடல் துன்பத்துக்காகவும் மனவேதனைக்கு உளமார வருந்துகிறேன்,'' என்றார். பிறகு, தாமரையையும், மகனையும் வீட்டிற்கு அழைத்து சென்றதால், தாமரையின், போராட்டம், நேற்று, எட்டாவது நாளுடன் முடிவிற்கு வந்தது.