மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பூ, மரியான், சென்னையில் ஒரு நாள் படங்களில் நடித்துள்ள பூ பார்வதி, தற்போது கமலின், உத்தமவில்லன் படத்திலும் நடித்துள்ளார். கதைப்படி ஜெயராமின் மகளாகவும், கமலின் மருமகளாகவும் நடித்துள்ளார். இப்படத்தில் நடித்துள்ள பூஜா குமார், ஆண்ட்ரியாவின் நடிப்பை தூக்கலாக பேசிய கமல், பார்வதியுன் நடிப்பும் அழுத்தமாக பதிந்திருப்பதாக சொன்னார். அதனால் படத்தில் தானும் ஒரு ஹீரோயின் என்கிற பாவணையிலேயே இருக்கிறார் பார்வதி.
மேலும், உத்தமவில்லன் ஆடியோ விழாவில் மற்ற நாயகிகளுடன் அவரும் மேடையேறியபோது, எஸ்.ஜானகியுடன் இணைந்து கமல் பாடிய, கண்மணி அன்போட காதலன் நான் எழுதும் கடிதமே என்ற பாடலின் பல்லவியை அற்புதமாக பாடினார் பார்வதி. அதையடுத்து பார்வையாளராக முதல் வரிசையில் அமர்ந்திருந்த கமலும், அங்கிருந்தபடியே மைக்கை பிடித்தபடி அந்த பல்லவியில் ஒரு வரியை பாடினார். அப்போது பார்வதியின் அற்புதமான குரல்வளத்தைக்கேட்டு அரங்கமே அதிரும் அளவுக்கு கைதட்டல் கிடைத்தது.
ஆனால், சிறப்பாக பாடும் திறமையும், குரல்வளமும் கொண்ட பார்வதி, சினிமாவில் பாடுவதற்கான முயற்சி எடுத்ததில்லையாம். ஆனால், இப்போது பல நடிகைகள் பின்னணி பாடிக்கொண்டிருப்பதால் அவருக்கும் அந்த ஆசை ஏற்பட்டிருக்கிறதாம். அதனால்தான் சரியான சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டிருந்த பார்வதி, உத்தமவில்லன் ஆடியோ விழா பெரிய மேடை என்பதால் பாடி தனக்குள் இருக்கும் பாடகியை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக்காட்டினாராம்.