விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
ஷங்கரின் டைரக்சனிலேயே டெக்னிக்கலாக மிகவும் பிரமாண்டமான படம் என்றால் அது எந்திரன் ஆகத்தான் இருக்கமுடியும். ஆனால் அந்தப்படத்தின் கதையை உருவாக்கிவிட்டு அதை படமாக்கத்தான் பல ஆண்டுகள் காத்திருந்தார் ஷங்கர். காரணம் அந்த படத்தின் பட்ஜெட்.. அப்போதெல்லாம் அந்த அளவு பட்ஜெட்டிற்கு தமிழ் சினிமா தயாராகி இருக்கவில்லை.. இருந்தாலும் அந்தப்படத்தின் கதையை எழுத்தாளர் சுஜாதாவுடன் உட்கார்ந்து பட்டை தீட்டினார் ஷங்கர். கமலை வைத்து இந்தியன் படத்தை கொடுத்த ஷங்கர், பிறகு ரோபோவிலும் அதாவது எந்திரனிலும் கமலை நடிக்க வைப்பதாகத்தான் அப்போது பரபரப்பான பேச்சாக இருந்தது.
அனில் கபூரை வைத்து ஷங்கர் தனது முதல்வன் படத்தை நாயக்காக ரீமேக் செய்தார். ஆனால் அதுவும் வெறும் பேச்சளவிலேயே நின்றுவிட்டது. பின்னர் அஜித் நடிப்பதாக பேச்சு திசை மாறியது. ஆனாலும் மேற்கொண்டு காரியங்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை.. அதில் சூப்பர்ஸ்டார்தான் நடிக்கவேண்டும் என்பது ஏற்கனவே எழுதப்பட்ட விதி என்றால் அதை யார் மாற்ற முடியும்..? அப்படித்தான் எந்திரன் உருவானது.