விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளிவந்த லிங்கா படம் கடந்த டிசம்பர் 12ம் தேதி வெளிவந்தது. விநியோகஸ்தர்கள் பிரச்னை, கதை திருட்டு வழக்குகள் என தொடர் பிரச்னைகளை லிங்கா சந்தித்து வருகிறது.
மதுரையைச் சேர்ந்த ரவிரத்தினம் என்பவர் "லிங்கா படம் நான் எடுத்து வரும் முல்லைவனம் 999 என்ற படத்தின் கதையை காப்பி அடித்து எடுக்கப்பட்டது" என்று வழக்கு தொடர்ந்தார். அவர் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதோடு மனுதாரர் சிவில் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து நிவராணம் தேடிக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் கூறியது.
ரவிரத்னம் விடுவதாக இல்லை. மதுரை மாவட்ட கூடுதல் உரிமையியல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். "முல்லை வனம் கதையும், லிங்கா கதையும் ஒன்றுதான் என்று உத்தரவிடவேண்டும். வழக்கு முடியும் வரை லிங்கா கதைக்கு அவர்கள் உரிமை கொண்டாடக்கூடாது" என்று மனுவில் தெரிவித்திருந்தார்.
நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர் வெங்கடேஷ், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரை கோர்ட்டில் நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டது. பின்னர் வழக்கை வருகிற மார்ச் மாதம் 16ந் தேதிக்கு ஒத்தி வைத்தது.