'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
பாபி சிம்ஹா, லிங்கா, பிரபஞ்ஜெயன் என மூன்று ஹீரோக்கள் இணைந்து நடித்துள்ள படம் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது. இந்த படத்தை மருதுபாண்டியன் இயக்கி தயாரித்துள்ளார். ஏடிஎம் புரொடக்சன்ஸ் சார்பில் டி.மதுராஜ் படத்தை வெளியிடுகிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. விழாவில், பாரதிராஜா, கே.பாக்யராஜ், பேரரசு, விஜயசேதுபதி, சினேகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பாரதிராஜா பேசுகையில், இந்த சென்னைக்கு ஒரு சக்தி உண்டு. இங்கு வருபவர்கள் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும் ஒரு கட்டத்தில் வளர்ச்சி பெற்று இங்கேயே நிரந்தரமாக தங்கி விடுவார்கள். யாரும் இங்கிருந்து திரும்பிச்சென்றதில்லை. அந்த அளவுக்கு யாரையும் கைவிடாத குணம் இந்த மண்ணுக்கு உண்டு. மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழி சினிமாக்களும் உருவான பூமி இது.
முன்பெல்லாம் இங்கு சினிமா சான்ஸ் தேடி வருபவர்கள், ஸ்டுடியோக்களின் கேட்டை உடைத்து உள்ளே செல்வது பெரிய கோட்டையை உடைத்து செல்வது போன்று கடினமான விசயமாக இருந்தது. ஆனால் இன்றைக்கு அது ரொம்ப எளிதான விசயமாகி விட்டது. கணவனிடம் மகனுக்கு ஒரு சைக்கிள் வாங்கிககொடுஙகளேன் என்று சொல்லும் மனைவியே, பையன் ஆசைப்படுறான் அவனை வச்சு ஒரு படம் எடுங்க என்று சொல்லும் அளவுக்கு சினிமா எளிதாகியிருக்கிறது.
மேலும், இப்போதெல்லாம் யாராவது என்னை படம் பார்க்க வாருங்கள், ஆடியோ விழாவுக்கு வாருங்கள் என்று சொன்னாலே எரிச்சலடைகிறேன். 2 மணி நேரத்தை காலி பண்ணப்போகிறோம் என்று எண்ணிக்கொண்டுதான் செல்வேன். அப்படித்தான் இந்த சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படம் பார்க்க இயக்குனர் மருதுபாண்டியன் அழைத்தபோதும் சென்றேன். ஆனால், முதல் காட்சியில் இருந்து எண்ட் கார்டு போடும் வரை ஒவ்வொரு காட்சியிலும் என்னை ஆச்சர்யப்படுத்தியிருந்தான். அநத அளவுக்கு சினிமாத்தனம் என்கிற எந்த பூச்சும் இல்லாமல் நிதர்சனமாக படம் இருந்தது.
நம்மிடம் பேசும்போது வார்த்தைகளை விழுங்கி விழுங்கி பேசிய அவனா இப்படியொரு அற்புதமான படத்தை எடுத்திருக்கிறான் என்று ஆச்சர்யப்பட்டுப்போனேன். படத்தில் நடித்திருப்பவர்களும்கூட இயல்பாக நடிததிருக்கிறார்கள். கதாநாயகிகளின் மேக்கப் மட்டும்தான் சில இடங்களில் ஓவராக தெரிந்தது. மற்றபடி துளியும் சினிமாத்தனம் இல்லாத ஒரு நல்ல படம் எடுத்திருக்கிறான.