விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
பெரும்பாலும் டைரக்டர் ஷங்கர் இயக்கும் படங்களுக்கு ஏ சென்டர்களில்தான் நல்ல ஓப்பனிங் இருக்கும். அவர்கள் படத்தை பார்த்து விட்டு சொல்லும் ரிசல்ட்டுக்கு பிறகுதான் மற்ற ஏரியாக்களில் வசூல் சூடு பிடிக்கும். ஆனால், தற்போது வெளியாகியுள்ள ஐ படததைப்பொறுத்தவரை ஏ சென்டர்களுக்கு இணையாக பி அண்ட் சி சென்டர்களிலும் சரியான வசூலாம்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஏரியா வாரியாக ஐ படத்தின் வசூல் நிலவரத்தை தெரிந்து கொள்வதற்காக தனது டீம் ஒன்றை தமிழ்நாடு முழுக்க டூர் அனுப்பி வைத்தாராம் ஷங்கர். அப்படி சென்றவர்கள் முக்கிய நகரங்களுக்கு மட்டுமே செல்லாமல் கிராமப்புறங்களில் ஐ படம் ஓடும் தியேட்டர்களுக்கும் விசிட் அடித்திருக்கிறார்கள்.
அப்போது, நகரத்துக்கு நிகராக கிராமங்களில் உள்ள பல தியேடடர்களில் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டபோதும், தியேட்டர்களுககு ரசிகர்கள் படையெடுப்பது வழக்கத்தைவிட அதிகமாகவே இருந்ததாம். இந்த ரிசல்ட் பற்றி ஷங்கரிடத்தில் தெரிவிக்கப்பட்டபோது, நான்கூட ஆணழகன், மாடலிங் சம்பந்தப்பட்ட படம் ஏ சென்டர்களைத்தான் அதிகமாக கவரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இப்போது நகரத்துக்கு நிகராக கிராமப்புறங்களிலும் படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு ஆச்சர்யமாக உள்ளது. இது ஏ சென்டருக்கு இணையாக கிராமத்து ரசிகர்களின் ரசனையும் மாறி விட்டதை உணர்த்துகிறது என்றாராம் ஷங்கர்.