மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படம் அவரது பிறந்த நாளில் வெளிவந்தது. இந்தப் படத்தால் எங்களுக்கு 40 கோடி நஷ்டம் அதனை ரஜினி திருப்பித் தரவேண்டும் என்று சில விநியோகஸ்தர்கள் சென்னையில் நேற்று (ஜன 10) உண்ணாவிரதம் இருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்டேஷ். சிசு கொலை செய்வதுபோல என் குழந்தை லிங்காவை இந்த விநியோகஸ்தர்கள் கொலை செய்து விட்டார்கள் என்று கண்ணீர் மல்க கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: நான் 30 வருடமாக சினிமாவில் இருக்கிறேன். 35 படங்கள் தயாரித்திருக்கிறேன். தமிழில் லிங்காவையும் சேர்த்து 3 படங்கள் தயாரித்திருக்கிறேன். படிக்கிற காலத்திலிருந்தே ரஜினியின் நண்பன். அவர் பக்கத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அவருடன் 15 ஆண்டுகள் நெருங்கி பழகினேன். தன்னுடைய ரசிகன் ஒருவனை அவர் தயாரிப்பாளராக்கினார். யாரிடமும் கடன் வாங்காமல் என் சொந்த பணத்தை போட்டு லிங்காவை எடுத்தேன். 60 வயதிலும் அந்த மனுஷன் (ரஜினி) ஒடி, ஆடி, சண்டைபோட்டு நடித்தார். இரவு, பகல், மழை எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு குடும்பத்தை மறந்து நடித்தார்.