மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
யான் படத்தின் படு தோல்வி காரணமாக ஜீவாவை வைத்து படம் எடுக்க யாருமே தயாராக இல்லை. எனவே, கடும் மன உளச்சலுக்குள்ளானார் ஜீவா. வெளியே எங்கும் போகாமல், நண்பர்கள் யாருடனும் பேசாமலும், மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன் என்று மனசுக்குள் பேசிக் கொண்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்திருக்கிறார்.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட நடிகர் விஷால், ஜீவாவை பிசியாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வகித்த சென்னை ரைனோஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ஜீவாவுக்கு வழங்க சிபாரிசு செய்திருக்கிறார். சிசிஎல் போட்டி விரைவில் நடைபெற உள்ளதால் தினமும் கிரிக்கெட் பிராக்ட்டீஸ் செய்து வருகிறாராம் ஜீவா. பகலில் தன் மனைவி நடத்தும் ஒன் எம்பி உணவகத்திற்குப்போய் டைம்பாஸ் பண்ணி வருகிறார்.
சிவ மனசுல சக்தி படத்தை இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரித்து நடிக்க திட்டமிட்டிருந்த ஜீவா, யான் படத்தின் மீதுள்ள நம்பிக்கை காரணமாக, ராஜேஷ் படத்தில் நடிக்க முடியாது என்று அவரை அவமானப்படுத்தி அனுப்பினார். காலம் மாறியது. ஜீவா தற்போது பட வாய்ப்பில்லாமல் வீட்டில் உட்கார்ந்திருக்கிறார். இந்நிலையில் ராஜேஷை சந்தித்து பழசை மறந்துவிட்டு என்னை வைத்து ஒரு படம் பண்ணுங்கள் என்று கேட்டிருக்கிறார் ஜீவா. தற்போது ஆர்யா, தமன்னா நடிக்கும் வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் ராஜேஷ். இப்படம் முடிவடைந்ததும், பார்க்கலாம் என்ற பதில் சொல்லி அனுப்பினாராம் ராஜேஷ்.