மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கே.பாக்யராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு படத்தில் ஊர்வசியின் அக்காள் கல்பனாதான் கதாநாயகியாக நடிக்கயிருந்தாராம். ஆனால், அவர் சில நாட்கள் படப்பிடிப்புக்கு சென்றபோது தமிழ் பேச தெரியாததால் அவரை வைத்து படப்பிடிப்பு நடத்த ரொம்பவே சிரமப்பட்டாராம் பாக்யராஜ். ஆனால், கல்பனாவுடன் ஸ்பாட்டுக்கு தினமும் சென்று வந்த அவரது தங்கை ஊர்வசிக்கு தமிழ் சரளமாக பேசத் தெரிந்ததோடு, நன்றாக எழுத படிக்கவும் தெரிந்து வைத்திருந்தாராம்.
அதைப்பார்த்த பாக்யராஜ்க்கு, கல்பனாவுக்கு பதிலாக ஊர்வசியை நடிக்க வைத்தாலென்ன என்று யோசனை தோன்ற, அவரிடம் கேட்டிருக்கிறார். ஆனால் அப்போது ஒன்பதாவது வகுப்பே படித்துக்கொண்டிருந்த ஊர்வசிக்கு நடிப்பதற்கு பயமாக இருந்ததாம். இருப்பினும் நான் நடிப்பு சொல்லித்தருகிறேன் என்று தைரியத்தைக் கொடுத்து அவரை நடிக்க வைத்தாராம் பாக்யராஜ்.
ஆனால், படப்பிடிப்பு தளத்தில் தினமும் ஊர்வசியை நடிக்க வைக்க பள்ளியில் வாத்தியார் கையில் பிரம்புடன் நிற்பது போலவே நின்றாராம் பாக்யராஜ். இதனால் அவரைக்கண்டாலே பள்ளி வாத்தியாரைக்கண்டு பயப்படுவதுபோல் பயந்து கொண்டேதான் அந்த படத்தில் நடித்தாராம் ஊர்வசி. அவர் சரியாக நடிக்கவில்லையென்றால் முதுகில் குச்சியை வைத்து அடிக்கவும் செய்வாராம்.
இதை இப்போதும் சொல்லி ஞாபகப்படுத்திக்கொள்ளும் ஊர்வசி, எனக்கு சினிமாவில் நல்ல வாத்தியார் கிடைத்தார் அதனால்தான் என்னால் பெரிய அளவில் வளர முடிந்தது. விசயம் தெரியாத வாத்தியார் கையில் நான் சிக்கியிருந்தால் எப்போதோ காணாமல் போயிருப்பேன் என்கிறார். மேலும், இப்போதும் பாக்யராஜை மற்றவர்களிடம் சொல்லும்போது, அவர் பெயரை குறிப்படாமல் எனது வாத்தியார் என்று சொல்லும் ஊர்வசி, அவர் வீட்டுக்கு போன் செய்து பேசினாலும் வாத்தியார் இருக்காங்களா? என்றுதான் கேட்பாராம்.