விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
சாமி இயக்கியுள்ள கங்காரு படததை தயாரித்திருப்பவர் சுரேஷ் காமாட்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றபோது, பேட்டா பிரச்சினையால் ஒரு லைட்மேன் படப்பிடிப்பை நிறுத்தி விட்டாராம். இதை நேற்று நடந்த கங்காரு படத்தின் ட்ரெய்லர் விழாவின்போது சற்று ஆவேசமாக தெரிவித்தார் அவர்.
அவர் பேசும்போது, இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து கொண்டிருந்தபோது ஒருநாள் எதிர்பார்த்தபடி பணம் கைக்கு வராததால் பேட்டா கொடுக்கப்படவில்லை. ஆனால், அதற்குள் யூனிட்டில் இருந்த லைட்மேன் ராஜாராம் என்பவர், பிரச்சினை செய்து படப்பிடிப்பையே நிறுத்தி விட்டார்.
அதையடுத்து இந்த விசயத்தை தயாரிப்பாளர் சங்கத்திடம் சொன்னபோது யாருமே கண்டு கொள்ளவில்லை. ஆனால், இயக்குனர் சங்கத்தில் தெரிவித்தபோது, ஆர்.கே.செலவமணி ஆகியோர்தான் இந்த விசயத்தில் தலையிட்டு உதவி செய்தார்கள். அவர்கள் தக்க சமயத்தில் செய்த இந்த உதவியை நான் என்றைக்குமே மறக்க மாட்டேன். ஆனால் உலகிலேயே முதலாளிய தொழிலாளி கண்ட்ரோல் பண்றது சினிமாவுல மட்டும்தான் நடக்குது. இந்த நிலைமையை, தயாரிப்பாளர் சங்கம் முக்கிய விசயமாக எடுத்துக்கொண்டு மாற்றணும். அப்பத்தான் சினிமாவுக்கு விடிவு காலம் பொறக்கும் என்று ஆவேசமாக தனது கருத்தினை பதிவு செய்தார்.