மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பிரசாந்த் நடித்த செம்பருத்தி படத்தில் அறிமுகமானவர் நடிகை ரோஜா. அதையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் ஒரு பெரிய ரவுண்டே வந்தவர், ஒரு கட்டத்தில் தன்னை சினிமாவுக்கு அறிமுகம் செய்த ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தற்போதும் சில படங்களில் வில்லி மற்றும் கேரக்டர் ரோல்களில் நடித்து வரும் ரோஜா, சின்னத்திரையிலும் லக்கா கிக்கா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதோடு ஆநதிராவில் அரசியல்வாதியாகவும் இருப்பதால், சென்னையில் இருந்து இடம்பெயர்ந்து ஐதராபாத்திலேயே குடியேறி விட்டார் ரோஜா. அங்கிருந்தபடியே அரசியல் பணிகளை தொடர்ந்து வருபவர், தனது பிள்ளைகளைகூட அங்குள்ள பள்ளியில்தான் படிக்க வைத்திருக்கிறார். ஆனால் அவரது கணவரான டைரக்டர் ஆர்.கே.செல்வமணி இயக்குனர் சங்கத்தின் பொறுப்பில் இருப்பதால் சென்னையில் இருக்கிறார். இருப்பினும், பிள்ளைகளுக்கு விடுமுறை நாளான சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் ஐதராபாத் சென்று விடுகிறார். பிள்ளைகளுடன் இரண்டு தினங்களை சந்தோசமாக கழித்து விட்டு, மறுபடியும் அவர் சென்னைக்கு வந்து விடுகிறாராம்.