மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கோச்சடையான் படத்திற்காக, மீடியாஒன் நிறுவனத்திற்கு வங்கிக்கடனுக்காக, திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள ரூ.22.21 கோடியை உத்தரவாத தொகையாக, லதா ரஜினிகாந்த் வழங்கியிருந்தார். கடனை இதுவரை திரும்ப கட்டாததால், திருமுடிவாக்கம் சொத்தை, வங்கி கையகப்படுத்திக்கொள்ளவதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்தை, யாரும் வாங்கவோ, விற்கவோ முயல வேண்டாம் என்று வங்கி கூறியுள்ளது. இந்நிலையில், கடனை திருப்பிச் செலுத்த, வங்கி தங்களுக்கு ஒரு மாத காலம் அவகாசம் அளி்த்திருப்பதாக ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குமுன்னதாக, ஆட் பீரோ அட்வர்டைசிங் நிறுவனம், தங்களை ஏமாற்றிவிட்டதாக லதா ரஜினிகாந்த் மீது குற்றம் சுமத்தியிருந்தது. இதற்கு மீடியா ஒன் நிறுவனம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பண பரிவர்த்தனையில் லதா ரஜினிகாந்த் ஒரு போதும் தலையிடவில்லை. ஆட் பீரோ கொடுத்ததாக சொல்ல கூடிய எந்தவொரு காசோலையோ, உத்திரவாத கையெழுத்தோ லதா ரஜினிகாந்த் கொடுக்கவில்லை. அவர்கள் 33 கோடி ரூபாய் பண பரிவர்த்தனையில் மட்டுமே கையெழுத்திட்டுள்ளார். அவை இந்த பரிவர்த்தனைக்கு உட்பட்டதில்லை. இந்த இரண்டு நிறுவனங்களின் பரிவர்த்தனையில் லதா ரஜினிகாந்தை சம்பந்தபடுத்த காரணம் அவர்களுக்கு தீங்கிழைக்கும் நோக்கமும், மிரட்டி பணம் பறிக்கும் நோக்கமுமே ஆகும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.