விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
2014ம் ஆண்டு ஜெயம்ரவி நடித்த ''நிமிர்ந்து நில்'' படம் மட்டுமே வெளிவந்தது. அந்தப் படத்தை மீடியாக்கள் பாரட்டினாலும் வணிகரீதியில் வெற்றி பெறவில்லை. 2009ல் வெளிவந்த பேராண்மைக்கு பிறகு ஜெயம் ரவி பெரிய வெற்றி எதையும் பெறவில்லை. தில்லாலங்கடி, எங்கேயும் காதல், ஆதிபகவன் படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கும் பூலோகம் படமும் ரிலீசாகவில்லை.
வெயிட்டிங்கில் இருக்கும் பூலோகம் படம், தற்போது தயாரிப்பில் இருக்கும் ஹன்சிகாவுடன் நடிக்கும் ரோமியோ ஜுலியட், அண்ணன் இயக்கத்தில் நயன்தாராவுடன் நடிக்கும் தனி ஒருவன், சுராஜ் இயக்கத்தில் த்ரிஷாவுடன் நடிக்கும் அப்பாடக்கர் படங்கள் 2015ல் வெளிவர இருக்கிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில் அப்பாடக்கர் படப்பிடிப்பில் இருந்த ஜெயம்ரவி திருநள்ளார் சனீஸ்பர பகவான் கோவிலுக்கு சென்று வழிபட்டார். கோவிலின் அனைத்து சன்னதிகளுக்கும் சென்ற அவர் சனீஸ்வர பகவான் சன்னிதியில் நீண்ட நேரம் இருந்து பிரார்த்தனை செய்தார். அவருடன் காமெடி நடிகர் சூரி, இயக்குனர் சுராஜ் ஆகியோரும் சென்றிருந்தனர். ஜெயம்ரவி வந்த தகவல் கடைசி வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.