விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
பொதுவாக ஜோதிட நம்பிக்கை என்பது பெரும்பாலான மக்களிடம் உள்ள விசயம்தான். அதிலும் சினிமாவில் அது இன்னும் அதிகமாக இருந்து வருகிறது. முக்கியமாக சினிமா படங்களின் பூஜை மற்றும் படங்களின் தொடக்க நாளை ஜோதிடரிடம் கேட்டறிந்து நல்ல நாளைப்பார்த்துதான் தொடங்குவார்கள். அதில் டி.ராஜேந்தர் போன்றவர்களெல்லாம் ஜோதிடம் என்ன செய்யச்சொல்கிறதோ அதைதான் செய்வார்கள். முக்கியமாக ஜோதிட ஆராய்ச்சியெல்லாம் செயது கொண்டிருக்கும் அவர், தான் வீட்டை விட்டு வெளியேறும் நேரம், கேமரா முன்பு செல்லும நேரம் என ஒவ்வொரு விசயத்திலும் பஞ்சாங்கம் பார்த்துதான் செயல்படுவார்.
அந்த வகையில் பார்த்திபனும் எற்கனவே ஜோதிட நம்பிக்கை கொண்டவர்தான் என்றபோதும், கடந்த காலம் சில சறுக்கல்களை சந்தித்தவர், இப்போது ஜோதிடம் பார்த்துதான் ஒவ்வொரு விசயங்களையும் செய்கிறாராம். கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை கடைசியாக இயக்கி வெற்றி கண்ட அவர், தான் அடுத்து இயக்கும் புதிய படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்து விட்டாராம்.
ஆனபோதும், அந்த படத்தை இப்போது தொடங்க வேண்டாம் என்று ஜோதிடர் ஒரு நாள் குறித்து கொடுத்திருப்பதால், தற்போதைக்கு படப்பிடிப்பை தள்ளி வைத்து விட்டு, சூதாடி, மாஸ் போன்ற படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் பார்த்திபன்.