7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா |
இயக்குநர் கே.பாலசந்தர், உடல்சுகவீனத்தால் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் மற்றும் அவரை சந்தித்த ரஜினி, குஷ்பு உள்ளிட்ட சினி பிரபலங்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உத்தமவில்லன் படத்தின் இறுதிக்கட்ட பணிகளுக்காக லாஸ்ஏஞ்சல்ஸ் சென்றுள்ள கமல், தனது குருநாதர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தி கேட்டு ஒரு ஆடியோ பதிவு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில் கமல்ஹாசன் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். அவர் பேசியதிலிருந்து இதோ....
உத்தமவில்லன் படத்தை சீக்கிரம் முடித்து காட்டு, பார்த்துவிட்டு போகிறேன் என்று என்னிடம் சொன்னார், அதிலிருந்தே அவர் உத்தமவில்லன் படம் பார்க்க எந்தளவு துடிக்கிறார் என்ற வேகத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. உத்தமவில்லன் படத்தின் இறுதிகட்ட பணிகளுக்காக இங்கே லாஸ் ஏஞ்சல்ஸ் வந்தேன், வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. கே.பாலசந்தர் உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தி அறிந்தேன். அவரது உதவியாளர் மோகனிடம் உடல்நிலை பற்றி விசாரித்தேன். ஆமாம் சார் கொஞ்சம் உடல்நிலை மோசமாக இருப்பதாக சொல்றாங்க, யாரிடமும் அவர் பேசவில்லை, நீங்கள் வேண்டுமானால் பேசி பாருங்கள் என்று சொல்லியபடி போனை கே.பி.யிடம் கொடுத்துவிட்டார்.
ஹலோ என்று மெல்லியதாக அவரது குரல் கேட்டது. கிட்டத்தட்ட 43 வருடங்களாக கேட்டு பழகின அதே குரல், எத்தனை பழுதப்பட்டாலும் எனக்கு அடையாளம் புரிந்தது. படவேலை நடந்து கொண்டு இருக்கிறது முடித்துவிட்டு வருகிறேன் என்றேன். நீண்டநேரம் என்னிடம் பேசினார். சுமார் ஒன்றரை நிமிடங்கள். என்னை பொறுத்தவரை அந்த நிலையில் அவர் அத்தனை நிமிடங்கள் பேசியது நீண்டநேரம் தான். அவர் என்னிடம் நிறைய பேசினார், ஆனால் அவர் பேசியது எனக்கு புரியவில்லை, இருந்தாலும் நான் புரிந்தது மாதிரி சரி சார், ஆகட்டும் சார் என்று சொல்லி வைத்தேன். சற்று நேரத்தில் தவறான இடங்களில் ஆமோதிக்கிறேன் என்று இருவருக்குமே விளங்கியபோது மெலிதாக சிரித்தார். எனினும், தொடர்ந்து கொஞ்சம் பேசிவிட்டு செல்போனை தனது உதவியாளரிடம் கொடுத்துவிட்டார்.
மோகன் என்னிடம், சார் ஆச்சர்யமாக இருந்தது, நாளைக்கும் பேசுங்கள் என்றேன். அடுத்தநாள் பேசக்கூப்பிட்டபோது, கே.பி.யின் மகன் பிரசன்னா பேசினார். ஒரு தந்தை கவலைக்கிடமாக இருக்கும்போது இரண்டு சகோதர்கள் என்ன பேசுவார்களோ அதை பேசினோம். உடனே, நான் ஊருக்கு கிளம்ப தேவையான ஏற்பாடுகளை கௌதமி செய்தார். நான் வந்து சாதிக்கக் கூடியது ஒன்றுமில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட டாக்டர் பட்டங்கள் ஏதும் இங்கு உதவாது, உண்மையை சொல்லப்போனால், படிக்காமல் பெறுகிற எந்த பட்டமும் எந்த தருணத்திலும் உதவாது.
ஒருபடத்தின் வேலையை முடிக்காமல் நான் வருவதை எனக்கு தொழில் கற்றுக்கொடுத்த குருவான கே.பி.யும் விரும்பமாட்டார். எனது ஆர்வமெல்லாம், முடிந்தால் படத்தை முடித்து அதை அவருக்கு போட்டு காட்ட வேண்டும். இரண்டாவது, போனில் அவர் என்ன பேசினார், என்ன சொல்ல வந்தார் என்பதை நான் அறிந்து கொள்ள வேண்டும். கே.பி. அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும். எங்கள் நேசத்தின் மற்றுமொரு பாசக்கடிதம் 'உத்தமவில்லன்'. இந்த எழுத்துகூட வேலைக்கு நடுவில்தான் நடக்கிறது. எனக்கு நான் விரும்பும் கலையில் நல்ல இடத்தை தேடித்தந்த என் ஆசானுக்கு வணக்கங்கள் என்றும்போல். மீண்டும் எழுந்து வாருங்கள் ஐயா. உங்கள் கமல்.
இவ்வாறு கமல் பேசியுள்ளார்.