மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழில் 'நான் ஈ', தெலுங்கில் 'மகதீரா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலி தற்போது 'பாகுபலி' என்ற பிரம்மாண்ட சரித்திரப் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். உலகத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் படமாக, தெலுங்குத் திரையுலகத்தின் கௌரவமாக 'பாகுபலி' படம் இருக்கும் என பலரும் பாராட்டி வருகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன் கூட ரஜினிகாந்த், ராஜமௌலி இந்தியாவின் நம்பர் 1 இயக்குனராக வருவார் என மனம் திறந்து பாராட்டினார்.
அதோடு, ராஜமௌலி இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் சொல்லியிருந்தார். 'லிங்கா' படத்தின் விழா இரண்டு நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடந்த போதுதான் ரஜினிகாந்த் அப்படிப் பேசியிருந்தார். நேற்று, அதே ஹைதராபாத்தில் தனது 'பிகே' படத்தின் நிகழ்ச்சிக்காக வந்திருந்த பாலிவுட் நடிகர் அமீர்கானும், ராஜமௌலியைப் பற்றிப் பாராட்டிப் பேசியுள்ளார். “ராஜமௌலியின் திறமை பற்றி எனக்குத் தெரியும். அவருடன் எப்போது வேண்டுமானாலும் பணியாற்றத் தயார்,” என அமீர்கான் கூறியுள்ளார்.'