விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
புதுமுக பெண் இயக்குனர் அப்சரா ராம்குமார் இயக்கியுள்ள படம் ஒண்ணுமே புரியல. இது ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம். கால் செண்டரின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஒரு அதிகாரிக்கு வேலை பழு காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு அவர் சைக்கோவாக மாறி என்ன செய்கிறார் என்கிற கதை. ஜாக் மைக்கேல், நித்யா பிரதீப், ஹரினி நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரெஹான இசை அமைத்துள்ளார். இந்தப் படம் ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழியில் ரீமேக் ஆகிறது.
இதுகுறித்து அப்சரா ராம்குமார் கூறியதாவது: இது எல்லா நாட்டு இளைஞர்களுக்கும் பொருந்துகிற கதை. எனது அண்ணன் ஜெர்மனியில் டைரக்ஷன் கோர்ஸ் படித்து வருகிறார். அவர் இந்தப் படத்தை அங்குள்ள திரைப்பட இயக்குனர்களுக்கு திரையிட்டுக் காட்டியிருக்கிறார். அதைப்பார்த்த ஒரு நிறுவனம் இதனை ஜெர்மன், மற்றும் ஆங்கில மொழியில் ரீமேக் செய்ய அதற்கான உரிமத்தை கேட்டிருக்கிறது. நானும் கொடுக்க சம்மதித்து விட்டேன். இது சந்தோஷமாக இருக்கிறது. இன்னும் இரண்டு மாதத்தில் தமிழ்நாட்டில் படத்தை வெளியிட ஏற்பாடு செய்து வருகிறேன். என்றார் அப்சரா.