மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழில் சித்தார்த் அதிகமாக எதிர்பார்த்த படம் ஜிகர்தண்டா. அந்த படத்தில் முதன்முறையாக ஆக்சன் ரோலில் நடித்த அவர், என் மீது விழுந்திருக்கும் ப்ளேபாய் இமேஜை இந்த படம் அடியோடு மாற்றி விடும் என்று கூறி வந்தார். அதோடு, இந்த படத்திற்கு பிறகு எனது சினிமா கேரியரே மாறப்போகிறது என்றும் கூறினார்.
ஆனால, அவர் அதிகப்படியாக எதிர்பார்த்த அநத படம் அவரை ஏமாற்றி விட்டது. படம் ஓடாதது மட்டுமின்றி, படத்தில் சித்தார்த்தை விட வில்லனாக நடித்த பாபி சிம்ஹாவின் நடிப்புக்குத்தான் பெயர் கிடைத்தது. அதனால் அடுத்தபடியாக காவியத்தலைவன் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தபோதும், அந்த படத்தில் ப்ருத்விராஜூம் நடித்திருப்பதால் ஒருவேளை பாபிசிம்ஹாவைப் போன்று இந்த படத்திலும் ப்ருதிவிராஜ்க்கு நல்ல பெயர் கிடைத்து விடுமோ என்கிற பயம் அவரது உள்மனதில் இருந்தது.
அதனால் காவியத்தலைவன் படத்தில் தனது நடிப்பை விட ப்ருதிவிராஜூன் நடிப்பையே புகழ்ந்த பேசி வந்த சித்தார்த், அவர் ஒரு நடிப்பு ராட்ஸசன் என்றும் கூறி வந்தார். ஆனால், இப்போது படம் திரைக்கு வந்தபிறகு சித்தார்த்திடமிருந்து இந்த மாதிரியான பர்பாமென்ஸை எதிர்பார்க்காத கோலிவுட் பிரபலங்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.