மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சினிமாவில் பின்னணி பாடுவதற்கென்று ஒரு குரல் வளம் வேண்டும். டி.எம்.ஸ், எஸ்.பி.பி., ஜேசுதாஸ், பி.சுசீலா, எஸ்.ஜானகி காலத்தில் எல்லாம் அப்படியொரு நிலைதான் இருந்தது. தகுதியான குரல் வளம் இல்லாதவர்களை யாரும் பாட அனுமதித்ததில்லை. ஆனால், சமீபகாலமாக அந்த நிலை மாறி விட்டது.
குறிப்பாக, யார் வேண்டுமானாலும் பின்னணி பாடலாம் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. அதனால்தான் தற்போது பெரும்பாலான நடிகர், நடிகைகள்கூட பாடத் தொடங்கி விட்டனர். அவர்களில் தனுசும் ஒருவர். தான் நடித்த புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற படத்தில் ''நாட்டு சரக்கு நச்சின்னுதான் இருக்கு...'' என்ற பாடல் மூலம் பின்னணி பாடகராக உருவெடுத்தார்.
அதைத் தொடர்ந்து, ஆயிரத்தில் ஒருவன் படத்தில், உன் மேல ஆசைதான், மயக்கம் என்ன, படத்தில் ஓட ஓட, 3 படத்தில், ஒய் திஸ் கொலவெறி என இதுவரை 15 பாடல்கள் வரை பாடியிருக்கிறார். அப்படி அவர் பாடிய பல பாடல்கள் ஹிட்டாகியிருக்கின்றன. அதனால் மற்ற ஹீரோக்கள் நடிக்கும் படங்களிலும் தனுசுக்கு பாட வாய்ப்பளித்து வருகிறார்கள்.
இதுபற்றி தனுஷ் கூறும்போது, இந்த சினிமாவில் எஸ்.பி.பி போன்ற முன்னணி பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். ஆனால் இப்போது என் போன்றோரும பாடுகிறோம். ஆனால் எனது குரல் கேட்பது போல் இருப்பதற்கு காரணம் டெக்னாலஜிதான். குரலில் இருக்கிற குறைகளை மாற்றி, வித்தியாசமான அவுட்புட் கொடுக்கிறார்கள். அதனால்தான், நான் பாடும் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக உளளது. அந்த வகையில், பிரபலமான இசைக்கலைஞர்கள் இருந்த இந்த சினிமாவில் நானும் ஒரு பாடகராக வலம் வருகிறேன் என்பது மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் தனுஷ்.