விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தி்ல் சி்த்தார்த், பிருத்விராஜ், வேதிகா நடிப்பில் உருவாகியுள்ள காவியத்தலைவன் படத்திற்கு, தமிழக அரசு, கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளித்துள்ளது.
ஏ.ஆர். ரகுமான் இசையில், பாடல்கள் அனைத்தும் இளைய தலைமுறையினரை மட்டுமல்லாது, அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.
நகர்ப்புறம் (ஆல்பம்), கிராமப்புற சூழல் (வெயில்), கிராமப்புற மக்கள், நகர்ப்புறங்களில் படும் கஷ்டம் (அங்காடித்தெரு), காவல்கோட்டம் நாவலை அடிப்படையாக கொண்டு (அரவான்) என பல்வேறு கதைக்களங்களில் இயக்கி வரும் இயக்குனர் வசந்தபாலன், முதன்முறையாக, புதுமுயற்சியாக, நாடக கம்பெனிகள் குறித்த கதைக்களத்தை படமாக்கியுள்ளார். இது, அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.