மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
செக் மோசடி புகார் தொடர்பாக நடிகை ஜீவிதாவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஐதராபாத் கோர்ட் உத்தரவிட்டது. ராஜமரியாதை, நானே ராஜா நானே மந்திரி, பதில் சொல்வாள் பத்ரகாளி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை ஜீவா. தமிழ் தவிர நிறைய தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் ராஜேசேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் தனது கணவருடன் சேர்ந்து படங்களை தயாரித்து வந்தார்.
இந்நிலையில், சேகர் ரெட்டி என்பவருக்கு ஜீவிதா ரூ.22 லட்சத்துக்காக செக் கொடுத்துள்ளார். அந்த செக்கை, சேகர் ரெட்டி வங்கியில் செலுத்தியபோது பணமில்லாமல் செக் திரும்பி வந்துவிட்டது. மேலும் அதற்குரிய மாற்று செக்கையோ அல்லது பணத்தையோ ஜீவிதா கொடுக்கவில்லை. இதனையடுத்து சேகர் ரெட்டி, ஐதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக ஜீவிதாவுக்கு கோர்ட் பலமுறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் ஜீவிதா அதையும் கண்டுகொள்ளவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜீவிதாவுக்கு ஜாமினில் வெளிவராத முடியாத அளவுக்கு பிடிவாரண்ட் அளித்து கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று வழக்கில் தீர்ப்பளித்த ஐதராபாத் கோர்ட், ஜீவிதாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.