விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
புது வசந்தம், சேரன் பாண்டியன், வானமே எல்லை, சிகரம் உள்பட பல படங்களில் நடித்தவர் ஆனந்தபாபு. பிரபல நடிகர் நாகேஷின் மகனான இவர், தனது தந்தையைப்போன்று காமெடியனாக இல்லாமல், ஹீரோவாக நடித்து ரசிகர்களின் கைதட்டலை அள்ளிக்கொண்டு வந்தார். அதோடு, புதுமையான முறையில் நடனமாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இதனால் நடிக்க வந்து சில படங்களிலேயே ஆனந்த பாபுவுக்கென்று ஒரு கமர்சியல் வட்டம் உருவானது. இருப்பினும் சுமார் 25 படங்கள் வரை நடித்தவரை பின்னர் சினிமாவில் பார்க்க முடியவில்லை. முற்றிலும் சினிமாவில இருந்து விலகியிருந்து வந்தார்.
இந்த நிலையில், மீண்டும் அவர் சினிமாவில் எனட்ரி கொடுக்க தயாராகிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால, ரீ-என்ட்ரியில் அவர் முன்பு போன்று நடிகராக களமிறங்கவிலலையாம். இயக்குனர் அவதாரமெடுக்கிறாராம். அதற்காக இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப பல கதைகளை அவர் தயார் செய்து வைத்திருக்கிறாராம். கூடிய சீக்கிரமே அவர் இயக்கப்போகும் படம் பற்றிய தகomfகள் வெளியாக உள்ளதாம்.