மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
என்னமோ ஏதோ, தலைவன் படங்களில் நடித்த நிகிஷா பட்டேல் தற்போது கரையோரம், நகுலுடன் நாரதன், விஜய் வசந்துடன் சகிண்டி, தெலுங்கில் ரம்பா ஊர்வசி மேனகை படங்களில் நடித்து வருகிறார்.
நிகிஷா நடிக்கும் கரையோரம் ஒரு திகில் படம். இதன் படப்பிடிப்புகள் கோவளம் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து வருகிறது. கடற்கரையில் குதிரையில் ஜாலியாக வரும்போது வில்லன்கள் அவரை துரத்துவது போன்ற காட்சி படமாக்கப்பட வேண்டியது உள்ளது. இதனால் மற்ற காட்சிகளில் நடித்துவிட்டு மீதியுள்ள நேரத்தில் நிகிஷா குதிரையேற்ற பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த பயிற்சி முடிந்ததும் அவர் சண்டைக் காட்சியில் நடிக்கிறார்.
தமிழ், கன்னடத்தில் உருவாகும் இந்தப் படத்தை கன்னட இயக்குனர் ஜேகேஎஸ் இயக்குகிறார். கன்னட ஹீரோ வசிஷ்டா, சிம்ஹா ஆகியோர் நடிக்கிறார்கள். இனியா வில்லியாக நடிக்கிறார். படத்தில் 3 பாடல் காட்சிகள் இடம்பெறுகிறது. அதில் ஒன்றை வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டடிருக்கிறார்கள்.