மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சமீப காலமாக படங்களைப் பற்றித்தான் சர்ச்சை அதிகமாக எழுந்து கொண்டிருக்கிறது. ஆனால், நேற்றோ தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட சினிமாவிலும் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தனது அழகான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் த்ரிஷாவுக்கு திருமண நிச்சயம் நடந்து விட்டது என வதந்தியைப் பரப்பி விட்டார்கள். அவருக்கும், தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து விட்டது என்ற செய்தி மீடியாக்களில் மட்டுமல்லாது, திரையுலகத்தினரிடையேயும் காட்டுத் தீயாகப் பரவியது.
இது பற்றி சம்பந்தப்பட்டவர்களை மீடியாவைச் சேர்ந்தவர்கள் தொடர்பு கொள்ள முயன்று தோற்றுப் போனார்கள். கடைசியாக இரவு பத்து மணிக்கு த்ரிஷா அவருடைய டுவிட்டர் வலைத்தளத்தில் தனது திருமண வதந்தி பற்றி ஒரு பதிவை வெளியிட்டார். “ஹலோ மக்களே...எனக்கு நிச்சயம் எல்லாம் நடக்கவில்லை, இது உங்களுக்கான தகவல். அப்படி ஒன்று நடக்கும் போது அது பற்றிய தகவல் என்னிடமிருந்துதான் முதலில் வரும்,” என அவர் தெரிவித்துள்ளார்.
நடிகை த்ரிஷாவின் அம்மா உமா இதுகுறித்து எமது நிருபரிடம் கூறுகையில், திருமண செய்தி முற்றிலும் பொய்யானது தகவல். திருமணம் முடிவானால் கண்டிப்பாக உங்களிடம் சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
த்ரிஷா கடந்த சில நாட்களாகவே பாலகிருஷ்ணாவுடன் நடிக்கும் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறாராம். தமிழில் அஜித்துடன் 'என்னை அறிந்தால்,' ஜெயம் ரவியுடன் ஒரு படம், இயக்குனர் மணிமாறனுடன் ஒரு படம் என அவர் தொடர்ந்து நடித்துக் கொண்டுதானிருக்கிறார். அவர் நடித்த 'பூலோகம்' படம் எப்போது வெளிவரும் என்று யாருக்குமே தெரியாமல் உள்ளது.
த்ரிஷாவுடன் இணைத்து பேசப்பட்ட வருண்மணியன் அது பற்றி இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த வதந்தி உண்மையிலேயே வதந்தியா..அல்லது விரைவில் செய்தியாகுமா என்பது எதிர்காலத்தில் தெரிய வரும்.