விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
இணையதள உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய பாடல் 'கொலை வெறி...' என்று சொன்னால் அது மிகையில்லை. இன்றைய இளம் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் அனிருத் இசையமைப்பில் தனுஷ் எழுதி பாடிய பாடலான 'ஒய் திஸ் கொலை வெறி..' பாடல் நேற்றுடன் மூன்றாவது ஆண்டை நிறைவு செய்தது. மூன்று வருடங்களுக்கு முன்னர் 2011ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி அந்தப் பாடல் 'யு டியூப்' வீடியோ இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்தப் பாடல் பெரும்பாலான ரசிகர்களைக் கவர்ந்து இணையதள உலகில் வைரலாகப் பரவி பரபரப்பாகப் பேசப்பட்டது.
உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்கள் அந்த வீடியோவை வெகுவாக ரசித்தார்கள். இசையமைப்பாளர் அனிருத், தனுஷ் இருவரும் ஒரே நாளில் இந்திய அளவில் ஏன் உலக அளவில் கூட பேசப்பட்டார்கள். தேசிய செய்தித் தொலைக் காட்சிகள் கூட அவர்களின் பேட்டிகளை ஒளிபரப்பி மூலை முடுக்குகளில் கூட அந்தப் பாடலைப் பற்றி பேச வைத்தார்கள். அதைத் தொடர்ந்து அந்தப் பாடலை பல்வேறு விதங்களில் மாற்றியமைத்து யு டியுபில் பதிவேற்றி அவர்களும் பேசப்பட்டார்கள். ஒரு இலங்கைத் தமிழர், அந்தப் பாடலை சுத்தமான தமிழில் பாடி பதிவேற்றினார். பிரபல ஹிந்திப் பாடகரான சோனு நிகாமின் மகன் நீவான் நிகாம் அவருடைய மழலைக் குரலில் பாடிய 'கொலை வெறி...' பாடலும் பலராலும் ரசிக்கப்பட்டது.
யு டியூப் என்ற ஒன்றின் மூலம் இந்த அளவிற்கு பைசா செலவில்லாமல் பெரும் புகழும், விளம்பரமும் கிடைக்கிறதே என்று அதன் பின்தான் திரையுலகினர் அவர்களது டிரைலர்கள், டீசர்கள், மற்ற வீடியோக்களை யு டியூபில் பதிவேற்றத் தொடங்கினார்கள். இன்று அவற்றை அவர்கள் முதன் முதலில் யு டியூபில்தான் பதிவேற்றுகிறார்கள். அதன் 'ஹிட்' எண்ணிக்கைகள் கூட இன்று மிகப் பெரும் செய்தியாக உருவெடுத்துவிட்டன.
மூன்று ஆண்டுகளுக்கு முன் பதிவேற்றப்பட்ட 'ஒய் திஸ் கொலை வெறி...' பாடலை இந்தச் செய்தியை எழுதும் வரை 8 கோடியே 61 லட்சத்து 44 ஆயிரத்து 161 பேர் பார்த்து ரசித்துள்ளார்கள். இந்த சாதனையை வேறு எந்த தமிழ்த் திரைப்பட வீடியோ..ஏன் இந்தியத் திரைப்பட வீடியோக்கள் கூட புரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
'கொலை வெறி...' பாடலின் மூன்றாவது ஆண்டு நிறைவையொட்டி தனுஷ், “ஹேப்பி கொலை வெறி..நாள்...மாற்றத்தின் நாள் இது...டிரெண்ட்...கொலை வெறியை ஒரு வழிபாடாகவே மாற்றிய உங்களுக்கு நன்றி...உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத், “ஹேப்பி..கொலை வெறி..நாள்...என் வாழ்வை மாற்றிய நாள்...நவம்பர் 16,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று நவம்பர் 16, ரஜினிகாந்த் நடித்துள்ள 'லிங்கா' படத்தின் இசை வெளியீட்டை முன்னிட்டு, 'லிங்கா நாள்' என ரஜினி ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்க, தனுஷ் 'கொலை வெறி நாள்' எனக் குறிப்பிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இன்றைய 'யு டியூப்' ஹிட்டுகளுக்கெல்லாம் முன்னோடியாக இருப்பது 'கொலை வெறி...' ஹிட்டுதான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.