ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி |
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு கேரளாவில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட எம்.ஜி.ஆருக்கு சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெல்லப்பிள்ளி கிராமம் ஆகும். அவரது தந்தை சில காலம் இலங்கையில் இருந்து விட்டு பின்னர் கேரளா திரும்பியபோது வடவன்னூரில் குடிபெயர்ந்தார். இப்போது வடவன்னூரில் எம்.ஜி.ஆருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கிராம பஞ்சாயத்து சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடதில் ஒரு சமுதாய கூடமும் அடங்கியிருக்கிறது.
நினைவிடம் குறித்து வடவன்னூர் கிராம பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீஜா கூறுகையில், ஒரு மாநாட்டுக் கூடம் மற்றும் கல்யாண மண்டபத்துடன் கூடியதாக அமைத்துள்ளோம். ரூ. 52 லட்சம் செலவில் இது அமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்யாண மண்டபத்தில் ஏழை எளிய மக்களுக்கு மிகவும் குறைந்த வாடகையில் கல்யாணம் நடத்த வாடகைக்கு விடப்படும். ஏழை மக்களுக்கு எம்.ஜி.ஆர். பெருமளவில் உதவியுள்ளார் என்பதால் இந்தத் திட்டம், என்று கூறியுள்ளார்.