'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
தெலுங்கானா, ஆந்திரப் பிரதேச அரசுகளுக்கிடையே கடந்த சில வாரங்களாகவே மோதல்கள் எழுந்து வருகின்றன. ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதிலிருந்தே தெலுங்குத் திரையுலகின் மையம் எங்கு உருவாகும் என்பது இன்னும் சந்தேகமாகவே உள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் தனியாக தெலுங்கானா திரைப்பட வர்த்தக சபை என்ற அமைப்பை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டார்கள். இதனிடையே நேற்று ஆந்திர மாநிலம் குண்டூரில் சீமாந்திரா திரைப்பட வர்த்தக சபை என்ற புதிய அமைப்பும் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகர் விஜயவாடா மற்றும் குண்டூர் நகரங்களுக்கிடையே உருவாக உள்ளதாக ஏற்கெனவே சொல்லப்பட்டு வருகிறது. அதனால், விஜயவாடா தெலுங்குத் திரையுலகின் மையமாக உருவாகும் வாய்ப்பு அதிகம் என்பதாலேயே அங்கு திரைப்பட வர்த்தக சபை ஆரம்பிக்கப்பட்டதாக தெலுங்கு இயக்குனர் திலீப் ராஜா என்பவர் தெரிவித்துள்ளார். தெலுங்குத் திரையுலகம் ஹைதராபாத்திலிருந்து, ஆந்திர மாநிலத்திற்கு மாறும் போது அது விசாகப்பட்டிணத்திலோ அல்லது நெல்லூரிலோதான் உருவாகும் என்ற கருத்தும் இருந்தது. ஆனால், திரையுலகத்தைச் சேர்ந்த பலர் திரைப்பட அமைப்பு, அதன் தலைநகரத்திற்கருகில் உருவாவதுதான் சிறந்ததாக இருக்கும் என கருத்து தெரிவித்ததாலேயே விஜயவாடாவுக்கு அருகில் ஆரம்பித்தோம். விஜயவாடா தெலுங்குத் திரையுலகின் வீடாக உருவாகும் போது, விசாகப்பட்டிணம் முழுமையாக படப்பிடிப்பு நடைபெறும் மாநகரமாக மாறும் என்றும் திலீப் ராஜா தெரிவித்துள்ளார்.
இரு மாநில அரசுகளும் மோதிக் கொள்வதைப் பார்க்கும் போது தெலுங்குத் திரையுலகம் சீக்கிரமே சீமாந்திரா பகுதிக்கு மாறிவிட வாய்ப்புள்ளதாகவே பலரும் கருதுகிறார்கள்.