ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி |
அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக்-ராதாவை பாரதிராஜா அறிமுகம் செய்தது போல், நான் அவர்களின் வாரிசுகளை அறிமுகம் செய்கிறேன் என்று சொலலிக்கொண்டு, கடல் படத்தில் கார்த்திக்கின் மகன் கெளதமையும், ராதாவின் மகள் துளசி நாயரையும் அறிமுகம் செய்தவர் மணிரத்னம்.அதனால் அந்த படத்திற்கும் அலைகள் ஓய்வதில்லை படத்திற்கு இணையான எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆனால் மணிரத்னம் ரசித்து எடுத்த அந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் படம் தோல்வியடைந்து இந்த படத்திற்கு பிறகு கோடம்பாக்கமே தங்களை தத்தெடுத்துக்கொள்ளும் என்ற கனவில் மிதந்து கொண்டிருந்த கெளதம்-துளசி இருவருக்குமே அப்படம் பலத்த ஏமாற்றத்தை கொடுத்தது.
இருப்பினும், அதற்கடுத்து கெளதமுக்கு அடுத்தடுத்து படங்கள் புக்காகி விட்டது. என்றாலும், துளசி நாயரைத்தான் கண்டுகொள்வாரில்லை. அதற்கு காரணம் அவரது பெருத்த உடல்கட்டுதான். ஆனபோதும், ரவி கே.சந்திரன் தனது யான் படத்துக்கு கதாநாயகி தேடியபோது, ஒருநாள் மணிரத்னம்தான் அவரது பெயரை பரிந்துரை செய்தாராம். சின்ன பெண்தான். ஆனால் நல்ல புரிதல் உள்ளது. எத்தனை சவாலான வேடத்தையும் எளிதாக செய்து விடுவாள் என்று சர்டிபிகேட் கொடுத்தாராம்.
அதனால்தான் ஜீவாவுக்கு ஜோடியாக யான் படத்திற்கு துளசி நாயரை புக் பண்ணினாராம் ரவி கே.சந்திரன். ஆனால், இந்த படமும் துளசிக்கு ஹிட்டாக அமையவில்லை. அதனால் அடுத்து என்ன செய்வது எனறு தடுமாறிப்போய் நின்ற துளசி நாயர், மணிரத்னம் துல்கர் சல்மானை வைத்து படம் இயக்குகிறார் என்று கேள்விப்பட்டு மீண்டும் சான்ஸ் கேட்டாராம். ஆனால், மணிரத்னம் செண்டிமென்ட் பார்க்கக்கூடியவரல்ல என்றபோதும், துளசி நடித்த முதல் இரண்டு படங்களுமே தோல்வி என்பதால், மீண்டும் அவரை வைத்து படம் இயக்கி அந்த தோல்வி தன்னை தொடர்ந்து விடக்கூடாது என்பதற்காக, என் படத்தின் கதாபாத்திரத்ற்கு நீ பொருந்த மாட்டாய். அதனால் இன்னொரு சந்தர்ப்பத்தில் சான்ஸ் தருகிறேன் என்று கைவிரித்து விட்டாராம்.
இதனால் நொந்துபோன துளசி நாயர், இப்போது யாராவது டைரக்டர்கள் வருகிறார்களா? என்று வழிமேல் விழி வைத்து காத்துக்கொண்டிருக்கிறார் .