விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
மதயானை கூட்டம் படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்தவர் விக்ரம் சுகுமாறன். முதல்படம் அவருக்கு ஓரளவுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. தற்போது தனது அடுத்தப்படத்திற்காக தயாராகி வருகிறவர், இந்த தீபாவளிக்கு ஒரு தலை தீபாவளி கவிதை ஒன்றையும் எழுதியிருக்கிறார். அதுவும் மண்வாசனையான கிராமத்து பாணியில் தொகுத்து வழங்கியிருக்கிறார். இதோ உங்களுக்காக...
ஞாயிற்றுக் கெழமைக்கும் நல்லசீர் வேணுமின்னு - ஊருல
தெனந்தெனம் மல்லுக்கட்டு
தீபாவளி மட்டும் திரும்பியா போய்விடம் - அட
வெறுங்கைய நக்கிக்கிட்டு
சீம அதிர சீர்வரிச தாடியின்னு - மூக்க
சிந்தி ஓக்காந்தா மக
ஏவி விட்டவுக எவரோ இல்லயப்பு - பெத்த
சீதையக் கட்டிக்கிட்ட வுக
ஏழப் புருசனையும் எழந்து நாளாச்சு - சாமி
எங்க போவோம் பணத்துக்கு
சிறுக்கிமக செவனம்மா என்ன பதிலுசொல்ல
சமந்தகார சனத்துக்கு
உக்கி ஒக்காந்தா ஊர்ஞலகம் காறித்துப்பும் - என
உள்ளத்துல நெனச்சுக்கிட்டேன்
சேல களவாண்டு செய்முற செஞ்சுக்கிற - குல
சாமியத்தான் கூட்டிக்கிட்டேன்.
கடைவீதி வந்ததுல கண்ணுல பட்டிருச்சு -நம்ம
கணபதி சில்க் ஹவுஸ்
எடுத்த பொருளையெல்லாம் பதுக்கிவைக்கயில - மொகம்
கேமராவுல மாட்டிக்கிச்சு
காக்கி உடுப்புகளும் கருண காட்டாம
லாக்கப்புல போட்டிருச்சு
நாக்கப் புடுங்கும்படி சேதி தெரிஞ்ச மக்க
கேள்விகள கேட்டிருச்சு
கழட்டி வச்ச தாலி அடகு போயிங்கூட - அட
பெயிலு கெடைக்கலையே
ஏழு தீபாவளி என்னக் கடந்திருச்சு - மக
கடன அடைக்கலையே
- இயக்குநர் விக்ரம் சுகுமாரன்