‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சொத்து குவிப்பு வழக்கில் கைதான ஜெயலலிதா 20 நாட்களாக பெங்களூர் சிறையில் இருந்து விட்டு உச்சநீதிமன்றம் அளித்த ஜாமீன் காரணமாக நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இதை அதிமுகவினர் தமிழகமெங்கும் இனிப்பு வழங்கி, பட்டாசுகள் வெடித்து தீபாவளித்திருநாள் போன்று கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில், ஜெயலலிதாவை விடுவிக்க வேண்டும் என்று ஏற்கனவே உண்ணாவிரதம இருந்த தமிழ்த்திரையுலகினரும் இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளனர். அதோடு அவரை வரவேற்று வாழ்த்தியும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்தும் ஜெயலலிதாவை வாழ்த்தி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், நீங்கள் ஜாமீனில் விடுதலை அடைந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நீங்கள் மன அமைதியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன். உங்களுக்காக நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ள ரஜினி, ஜெயலலிதாவுக்கு தீபாவளி வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளர்.