விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
சேட்டை படத்திற்கு பிறகு ஆந்திராவுக்கு சென்று விட்ட அஞ்சலி, தற்போது சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு, தான் சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தையெல்லாம் தனது சித்தி பாரதிதேவி எடுத்துக்கொண்டதாக முன்பு புகார் சொன்ன அஞ்சலி, அதன்பிறகு தான் சம்பாதித்த பணத்தைக்கொண்டு சமீபத்தில் ஐதராபாத்தில் ஒரு பங்களா வாங்கி குடி புகுந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அஞ்சலிக்கு அமெரிக்காவில் ஒரு பாய் ப்ரண்ட் இருப்பதாகவும் அவரை சந்திக்க அவர் அடிக்கடி அமெரிக்கா சென்று வருவதாகவும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்த நிலையில், தற்போது, அஞ்சலிக்கு ஆந்திராவிலுள்ள ஒரு தொழிலதிபருடன் காதல் மலர்ந்திருப்பதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாகவும் பரபரப்பு செய்திகள் பரவிக்கொண்டிருககிறது.
ஆனால், இந்த செய்தியை கேட்டு அதிர்ந்து போன அஞ்சலி, அதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார். நான் சினிமாவில் படத்துக்குப்படம் காதலிப்பதோடு சரி. மற்றபடி யார் மீதும் எனக்கு காதல் இல்லை. அமெரிக்காவிலும் காதலர் இல்லை, ஆந்திராவிலும் காதலர் இல்லை. யாரோ தேவையில்லாமல் என்னைப்பற்றி இப்பயெல்லாம் வதந்தி பரப்பி விட்டு எனனை டென்சன் செய்து வருகிறார்கள் என்கிறார்.
மேலும், எனக்கு இன்னும் திருமண வயது வரவில்லை. இன்றைக்கு 30 வயதுக்கு மேலும் தென்னிந்திய நடிகைகள் ஹீரோயினாக நடிக்கிற நிலைமை உருவாகியிருக்கிறது. அதனால் இன்னும் பல ஆண்டுகளுக்கு நான் சினிமாவில் நடித்துக்கொண்டேயிருப்பேன் என்கிறார் அஞ்சலி.