எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் | வயலில் நாற்று நட நெல்லை மக்கள் தந்த பயிற்சி: அனுபமா பரமேஸ்வரனின் 'பைசன்' அனுபவம் | உழைக்கும் கரங்கள், எஜமான், கண்ணப்பா - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வெள்ளிவிழா ஆண்டின் நிறைவில் விண்வெளி நாயகன் கமல்ஹாசனின் “தெனாலி” | நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் |
கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரை ஐ படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு அழைத்து வந்திருந்தனர்.
எத்தனையோ பெரிய ஹீரோக்கள் இருக்க, புனித் ராஜ்குமாரை அழைத்ததற்கும் மிகப்பெரிய காரணம் உண்டு.
ராஜ்குமார் காலத்திலிருந்தே கன்னட சினிமா உலகம் அந்த குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகிறது.
ராஜ்குமாரின் ஆதரவு இல்லாமல் கன்னடத்திரையுலகில் யாருமே படம் எடுக்க முடியாது என்று சொல்வார்கள்.
அவரது மறைவுக்குப் பிறகு ராஜ்குமாரின் பிள்ளைகளான புனித் ராஜ்குமார், சிவ ராஜ்குமார் கட்டுப்பாட்டுக்குள் கட்டுண்டு கிடக்கிறதாம் கன்னட திரையுலகம்.
கன்னடத்தில் தயாரிக்கப்பட்ட நேரடி கன்னடப்படங்களின் வசூல் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, மற்ற மொழிகளில் தயாரிக்கப்பட்ட படங்களை கர்நாடகாவில் வெளியிடுவதிலும், கன்னடத்தில் டப் செய்யப்பட்ட படங்களை வெளியிடுவதிலும் அங்கே கடுமையான கட்டுப்பாடு உள்ளது. இப்படி கட்டுப்பாடு போட்டதே ராஜ்குமாரின் குடும்பத்தினர்தான்.
பல கோடி போட்டு ஐ படத்தைத் தயாரித்த ஆஸ்கார் ரவி, போட்ட பணத்தை விரைந்து எடுக்கும் எண்ணத்தில், கர்நாடகாவில் சுமார் 200 தியேட்டர்களில் ஐ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் கர்னாடகாவில் உள்ள கட்டுப்பாடு ஆஸ்கார் ரவிக்கு பெரும் தடையாக இருக்கிறது.
இந்த கட்டுப்பாட்டை ரகசியமாக தளர்த்த வேண்டும் என்றும், ஐ படத்தை அங்கே பல தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கணக்குப்போட்டுத்தான் கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரை அழைத்து வந்து, ஹாலிவும் நடிகர் அர்னால்ட் அருகில் உட்கார வைத்து பெருமைப்படுத்தினார்.
புனித் ராஜ்குமருக்கு இப்படி ஒரு மரியாதையைச் செய்ததன் மூலம், ஐ படத்தை கர்னாடகாவில் அதிக திரையரங்குகளில் ரிலீஸ் செய்துவிடமுடியும் என்று நம்பிக்கொண்டிருக்கிறாராம் ஆஸ்கார் ரவி.