மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
வேடப்பன், வெளுத்துக்கட்டு உள்பட சில படங்களில் நடித்தவர் அருந்ததி. பெங்களூரைச் சேர்ந்தவரான இவருக்கும் விஜய், அஜீத், சூர்யா என்ற பெரிய நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற கனவெல்லாம் இருந்தது. ஆனால், எதுவும் கைகூடவில்லை. இருப்பினும் கிடைத்த படங்களில் நடித்து வருகிறார்.
கடைசியாக, விமல்-பிரசன்னா நடித்த நேற்று இன்று என்ற படத்தில் ஒரு விலைமாது ரோலில் படம் முழுக்க ஒரு டீசர்ட்டை அணிந்து நடித்திருந்தார். அதையடுத்து, அருந்ததி நடிப்பில் தொட்டால் தொடரும், சரவணப் பொய்கை, நாய்கள் ஜாக்கிரதை ஆகிய படங்கள் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளன.
ஆனால், இதன்பிறகு நடிப்பதற்கு இன்னமும் எந்த கம்பெனியும் அருந்ததியை அணுகவில்லையாம். அதனால் சில மாதங்களாக வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கும் அருந்ததி, இதே நிலை நீடித்தால் இன்னும் ஓரிரு மாதத்தில் சென்னையை காலி செய்து விட்டு தனது சொந்த ஊரான பெங்களூருக்கு சென்று விட முடிவெடுத்துள்ளாராம். ஒருவேளை அதற்குள் தொட்டால் தொடரும், நாய்கள் ஜாக்கிரதை படங்கள் வெளியாகி ஹிட்டாக அமைந்து விட்டால், பெங்களூருக்கு திரும்பிச்செல்லும் தனது முடிவை மறுபரிசீலனை செய்வாராம் அருந்ததி.