'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
வினுபாரதி இயக்கியுள்ள படம் மூச். புதுமுகங்கள் நிதின், நிஷா, சுகாசினி ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் டைரக்டர் பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் ஒரு முக்கியத்துவம் வாய்நத டாக்டர் வேடத்தில் நடித்துள்ளார்.
இறந்து போன ஒரு ஆத்மாவுக்கும், இரண்டு குழந்தைகளுக்குமிடையே நடக்கும் பாசப்போராட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு குன்னூர் பகுதியில் நடைபெற்றுள்ளது.
அப்போது ஒருநாள் இரவு 3 மணி அளவில் திடீரென நெஞ்சு வலியால் துடித்த பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ், டைரக்டர் வினுபாரதியை தனது அறைக்கு அழைத்திருக்கிறார். இரவு நேரம் என்றதும் பதறிக்கொண்டு அவர் தங்கியிருந்த அறைக்கு ஓடியிருக்கிறார். அப்போது லைட்டை போட்டுக்கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்த ஜெயராஜ் நெஞ்சு வலிக்கிறது என்றாராம். இதனால் ஆடிப்போனாராம் டைரக்டர்.
இரவு நேரம் என்பதோடு, முன்னபின்ன தெரியாத ஊரில் இந்த நேரத்தில் எந்த ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்து செல்வது என்பது புரியாமல் தடுமாறியிருக்கிறார். அதையடுத்து அவர் தேற்றும் வகையில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அதோடு மற்ற யூனிட் நபர்களும் வந்து காபியெல்லாம் போட்டு குடித்தபடி தூங்காமல் அவருடனேயே பேசிக்கொண்டு இருந்தார்களாம். பின்னர் காலை விடிந்ததும் ஒரு மருத்துவமனைககு அவரை அழைத்து சென்றார்களாம். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர், இது நெஞ்சு வலி இல்லை. சாதாரண கேஸ் ப்ராபளம்தான் என்று மருந்து கொடுத்து அனுப்பியிருக்கிறார்.
இதுபற்றி ஜெயராஜ் கூறும்போது, 1984ல் நான் ஊட்டிக்கு சென்றிருந்தபோது எனக்கு ஒரு முறை ஹார்ட் அடடாக் வந்தது. அதேபோல் இப்போது குன்னூர் வந்தபோது மறுபடியும் நெஞ்சு வலித்ததால் அதே நெஞ்சு வலிதான் திரும்பவும் வந்து விட்டதோ என்று பயந்து விட்டேன். என்னை பரிசோதித்த டாக்டர் சாதாரண கேஸ் பிரச்னைதான் என்ற சொன்ன பிறகுதான் மறுபடியும் இயல்புதன்மைக்கு மாறினேன் என்று கூறினார்.