மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஓணம் பண்டிகையையொட்டி கேரள அரசு ஒவ்வொரு ஆண்டும் ஒரு சாதனையாளருக்கு விருது வழங்கி கவுரவிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையையொட்டி பாடகர் கே.ஜே.யேசுதாசுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தது. ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசும், பட்டயமும் கொண்டதாகும் இந்த விருது. பரிசுத் தொகை குறைவாக இருந்தாலும் இந்த விருதை கேரள ரத்னா விருதாக கருதுவார்கள் மலையாளிகள்.
திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் நேற்று (செப் 11) நடந்த எளிய விழாவில் அவருக்கு இந்த விருதை கேரள முதல்வர் உம்மன் சாண்டி வழங்கினார். விழாவில் எதிர்கட்சித் தலைவர் அச்சுதானந்தன், மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் கே.சி.ஜோசப், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில பேசிய ஜே.ஜே.யேசுதாஸ் " நான் எத்தனையோ விருதுகளை பெற்றிருந்தாலும் நான் பிறந்த மண்ணில் என் மக்கள் சார்பாக கொடுக்கப்பட்ட இந்த விருதை பெரிதும் மதிக்கிறேன். மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற கேரளாவில் உள்ள எல்லா கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.